அஸ்வினுக்குப் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் தமிழக வீரர்!

Written By vinoth
Updated: வியாழன், 23 அக்டோபர் 2025 (08:58 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறைக் கோப்பைகள் வென்றுள்ள அணிகளில் ஒன்று சி எஸ் கே.  அந்த அணி இதுவரை ஐந்து முறைக் கோப்பை வென்று அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது. கடந்த சீசனில் அந்த அணிக்கு ருத்துராஜ் கேப்டனாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் காயம் காரணமாக அவர் பாதியிலேயே விலகியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார்.

சென்னை அணியின் அடையாளங்களில் ஒருவராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒன்பது ஆண்டுகள் கழித்து கடந்த சீசனில் மீண்டும் சென்னை அணிக்குத் தேர்வானார். ஆனால் அவர் ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதனால் இனிமேல் ஐபிஎல் தொடரில் எதிர்காலம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்த சீசனில் அஸ்வினுக்குப் பதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை வாங்க சி எஸ் கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

அடுத்த கட்டுரையில்
Show comments