கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

vinoth
சனி, 16 நவம்பர் 2024 (11:19 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று நடந்த நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

நேற்று நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 109 ரன்கள் மற்றும் திலக் வர்மா 120 ரன்கள் எடுத்தனர். அதன் பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 150 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர் “கடந்த ஆண்டு இதே மைதானத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினேன். இன்றைய இன்னிங்ஸ் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கடவுளுக்கும் கேப்டனுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும். சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்தேன். இன்றைய மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா: மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டம்!

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments