Daily Horoscope

ஓவல் மைதானத்தில் இவர்களை எதிர்கொள்வதுதான் சவாலாக இருக்கும்… ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

Written By vinoth
Updated: வெள்ளி, 2 ஜூன் 2023 (14:25 IST)
இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தயாராகி வருகின்றன. இரு அணி வீரர்களும் லண்டனில் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸி அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனால் அந்த அணிக்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. 7 ஆம் தேதி தொடங்கவுள்ள போட்டி பற்றி ஆஸி அணியின் துணைக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.

அதில் “ஓவல் மைதானத்தில் சுழல் பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை உருவாக்க முடியும். அதனால் இந்தியாவின் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். ஆஸி அணிக்கு எதிராக இவ்விருவரும் மிகச்சிறப்பாக பந்து வீசி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments