1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (08:52 IST)

பந்து வீசியபோது சொதப்பிட்டோம்…? – தோல்வி குறித்து ரோஹித் சர்மா!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் நேற்று இந்திய அணி தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 நேற்று மொகாலியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்ட்யாவும் அரைசதம் வீழ்த்தி அசத்தினார்கள்.


ஆனால் இரண்டாவதாக களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19வது ஓவரிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் வென்று வெற்றியை கைப்பற்றியது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து பேசிய அணி கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என நினைக்கிறேன். 200 என்பது நல்ல ஸ்கோர். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் பந்துவீச்சில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்” என கூறியுள்ளார்.