ரோஹித், கோலியை அடுத்து முக்கிய மைல்கல்லை எட்டிய ரிஷப் பண்ட்!

vinoth
சனி, 23 நவம்பர் 2024 (08:15 IST)
16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸ் மூலமாக அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கோலி ஆகியோர் 2000 ரன்களைக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments