ரிஷப் பண்ட் இந்தியாவின் சொத்து… டி 20 உலகக் கோப்பையில் அவர் இடம்பெறுவாரா?- ஜெய் ஷா அளித்த பதில்!

vinoth
செவ்வாய், 12 மார்ச் 2024 (07:45 IST)
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதனால் அவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் தீவிரப் பயிற்சிக்கு பிறகு இப்போது அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார்.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பயிற்சி ஆட்டங்களில் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “தற்போது ரிஷப் பண்ட் சிறப்பாக பேட் செய்கிறார். உலகக் கோப்பை டி 20 தொடரில் அவர் இடம்பெற்றால் இந்திய அணிக்கு சிறப்பான அம்சமாகும். அவர் இந்திய அணியின் சொத்து. ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா: மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டம்!

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments