“போட்டி முடியும் வரை ஒரே இடத்தில் நின்றேன்… கால்கள் வலிக்கின்றன” –அஸ்வினின் நம்பிக்கை!

திங்கள், 9 அக்டோபர் 2023 (06:57 IST)
நேற்று நடந்த ஆஸ்திரேலியா- இந்தியா போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி பவுலர்கள் ஆரம்பம் முதல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் வீழ்த்திய விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை ஈட்டியது.

இதையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கோடு ஆடவந்த இந்திய அணி 2 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கோலி மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

இந்த போட்டியில் கோலி 12 ரன்களில் இருந்த போது அவர் கொடுத்த கேட்ச்சை கோட்டை விட்டார் மிட்செல் மார்ஷ். அந்த சம்பவம் பற்றி பேசிய அஸ்வின் “அந்த கேட்ச் காற்றில் இருந்த போது, நான் எழுந்து என்னுடைய அறைக்கு ஓடினேன். சென்று கொண்டிருக்கும்போதே கூட்டத்தின் கோஷம் எழும்பியதும். கேட்ச் விடப்பட்டது என தெரிந்துகொண்டேன். அந்த நிமிடத்தில் இருந்து போட்டி முடியும் வரை நான் அதே இடத்தில்தான் நின்றேன். இப்போது என் கால்கள் வலிக்கின்றன” எனக் கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments