லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் லோகோ அறிமுகம்!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:21 IST)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் லோகோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள லக்னோ அணி மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த அணியில் கே எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தை தொடங்கிய லக்னோ அணி தங்கள் அணிக்கு பெயர் சொல்லுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து அணியின் பெயரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்(luknow super giants) என அறிவித்து அணித் தலைவராக கே எல் ராகுலை நியமித்துள்ளது.

இந்நிலையில் இப்போது அணியின் லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. லோகோவின் மேல் பகுதியில் இந்திய் தேசிய கொடியின் வடிவம் போன்ற இறகு வடிவமைக்கப்பட்டு, அதன் நடுவில் நீல வண்ணத்தில் பேட் வைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments