டீகாக், பூரான் அதிரடி.. பவுலிங்கில் கலக்கிய மேக்ஸ்வெல்- பெங்களூர் அணிக்கு லக்னோ நிர்ணயித்த இலக்கு!

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (21:16 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டிகாக் (81), ஸ்டாய்னஸ்(24) மற்றும் பூரான் (40) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். கேப்டன் கே எல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய மேக்ஸ்வெல் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். யாஷ் தயார் 24 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். சேஸிங்கில் சிறப்பாக செயல்படும் ஆர் சி பி அணி இந்த இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
 

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments