பும்ரா இல்லன்னா இந்திய பவுலிங் ஜீரோ… கிண்டல் செய்த பாகிஸ்தான் வீரர்!

vinoth
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (08:13 IST)
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி 20 உலகக் கோப்பையை வென்ற ஒருமாதத்துக்குள்ளாகவே முழு பலம் கொண்ட இந்திய அணி இலங்கையிடம் தொடரை இழந்திருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 27 ஆண்டுகளாக இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இந்திய அணி இழந்துள்ளது. இந்த தொடரில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக பேட்டிங்கில் ரோஹித் ஷர்மாவைத் தவிர வேறு யாருமே சரியாக விளையாடவில்லை. ரோஹித் ஷர்மா அவுட் ஆனதும் இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவது மூன்று போட்டிகளிலும் தொடர்ந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் “பும்ரா இல்லையென்றால் இந்திய் அணியின் பவுலிங் யூனிட் ஜீரோதான்… நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டுள்ளார். அதில் பல இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் “நீங்கள் சொல்லும் கருத்து உண்மைதான்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments