Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யகுமார் யாதவ்வை மனம்திறந்து பாராட்டிய ஹர்திக் பாண்ட்யா… ஈகோ எல்லாம் ஓவர்!

Written By vinoth
Updated: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (14:59 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்தது.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இனி இந்திய அணிக்குக் கேப்டன் பொறுப்புக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அவர் அடிக்கடி காயத்தால் பாதிக்கப்படுவதுதான் என்று சொல்லப்பட்டது.

இதனால் புதுக்கேப்டன் சூர்யா மேல் ஹர்திக் அதிருப்தியில் இருப்பதாக எல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று வங்கதேச அணிக்கு எதிரான தொடர்நாயகன் விருதை வென்றபின்னர் பேசிய ஹர்திக் “கேப்டன் சூர்யகுமார் மற்றும் கம்பீர் ஆகிய இருவரும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர்” எனப் பாராட்டியுள்ளார். அதே போல சூர்யகுமார் யாதவ்வும் கோப்பையை வென்ற பின்னர் ஹர்திக் கையில் கொடுத்து அவரோடு சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments