சி எஸ் கே வீரர்களுக்கு அணி உரிமையாளர்களிடம் இருந்து அழுத்தமா? பிராவோ கூறிய பதில்!

vinoth
வெள்ளி, 15 மார்ச் 2024 (11:18 IST)
ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் “புதிய சீசனுக்காக காத்திருக்க முடியவில்லை. புதிய பொறுப்பு. மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்” எனக் கூறியிருந்தார்.

இதனால் சி எஸ் கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. தோனிக்கு அணியில் வேறு ஏதேனும் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் பௌலிங் பயிற்சியாளரான டுவெய்ன் பிராவோ சி எஸ் கே வீரர்கள் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “சில அணிகளில் சரியாக விளையாடாத  வீரர்களுக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து அழுத்தம் வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் சி எஸ் கே அணியில் அதுபோல எந்த புற அழுத்தமும் வீரர்களுக்கு இருக்காது. அதுதான் சி எஸ் கே அணியின் சிறப்பே.” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments