Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை…” பவுலிங் பற்றி பும்ரா கருத்து!

Written By vinoth
Updated: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:10 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். இதுபற்றி போட்டிக்குப் பின்னர் பேசிய பும்ரா “நான் எப்போதும் முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. 4 விக்கெட்கள் எடுத்து விட்டதால் நான் சாதித்து விட்டதாக நினைக்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக பந்துவீச முயற்சிக்கிறேன். ஆடுகளத்தை பொறுத்து பந்துவீசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய பும்ரா, தற்போது மீண்டும் அணியில் திரும்பி சிறப்பாக பந்துவீசி கலக்கி வருகிறார்.

எல்லாம் காட்டு

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments