Daily Horoscope

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

Written By vinoth
Updated: வியாழன், 31 ஜூலை 2025 (08:23 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து வரும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தில் உள்ளது.

இதையடுத்து இன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஓவல் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் துரதிர்ஷ்டமான மைதானமாகவே இதுவரை அமைந்துள்ளது. இந்திய அணி இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளை இந்த மைதானத்தில் விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையில் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் நான்கு பேர் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ், லியாம் டாவ்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ப்ரைட்ன் கார்ஸல் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் ஜேக்கப் பீத்தெல், கஸ் அட்கிஸ்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆய்லி போப் அணியை வழிநடத்தவுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments