Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு டிராவிட்டுக்குப் பிறகு பயிற்சியாளர் இவர்தானா? பிசிசிஐ போடும் ஸ்கெட்ச்!

Written By vinoth
Updated: புதன், 15 மே 2024 (06:53 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

உலகக் கோப்பை தொடரோடு அவர் பதவி காலம் முடிந்தாலும் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது ஜூன் மாதத்தோடு அவர் பணிக்காலம் முடிய இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பணியாற்ற சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அவர் தலைமையில் சி எஸ் கே அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? இம்பாக்ட் பிளேயராக மட்டும் களமிறங்குவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments