தோனியின் ஃபேன்பேஸ் கண்டு நெகிழ்ந்த பேட்கமின்ஸ்

Sinoj
சனி, 6 ஏப்ரல் 2024 (14:19 IST)
நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தபோது, மைதானத்திற்குள் நான் கேட்ட அதிகப்பட்ட சத்தம் இதுவாகத்தான் இருக்கும் என்று பேட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
 
ஐபிஎல்-2024 சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்  நடந்து வருகிறது.
 
இதில், சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
 
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லீக் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக சன்ரைசஸர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது.
 
இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் இப்போட்டியின்போது தோனி மைதானத்திற்கு வருகையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ஷிவம் துபே ஸ்பின்னர்கலுக்கு எதிராக மிகச்சிறப்பான விலையாடினார். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலர்கள் பந்துவீச விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தற்போது அதிரடியாக விளையாடிய வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவும் மிகச் சிறப்பாக இருந்தது.  தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும்போது, ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறெங்கேயும் நான் கேட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments