Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி வாய்ப்ப பத்தி இப்போ பேசமுடியாது.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Written By vinoth
Updated: சனி, 28 அக்டோபர் 2023 (07:21 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 271 என்ற இலக்கை நோக்கி தற்போது தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய தென் ஆப்பிரிக்கா பரபரப்பான திரில் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மேலும் பலவீனமாகியுள்ளது.

தோல்விக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் “நாங்கள் களத்தில் மிகச்சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். போட்டியில் டி ஆர் எஸ் முறையும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடைசியாக நாங்கள் அப்பீல் செய்த விக்கெட்டுக்கு நடுவர் விக்கெட் கொடுத்திருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும். இப்போதைக்கு நாங்கள் அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியாது. அடுத்த மூன்று போட்டிகளையும் வென்ற பிறகு பிற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியும்” எனக் கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments