Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியா: திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பள்ளிகள்

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 29 மே 2020 (14:48 IST)
தென் கொரியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் 56 புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
பெரும்பாலான புதிய தொற்றுகள் தென் கொரியாவின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனமான கூப்பாங்கிற்கு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ளது. புச்சியோன் பகுதியில் உள்ள இந்த கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களின் உடைகள் மற்றும் காலணிகளில் இருந்து கொரோனா வைரஸை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
 
இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் உள்ள மற்ற சேமிப்பு கிடங்கில் பணியாற்றுபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
 
புச்சியோன் பகுதியில் திறக்கப்பட்ட 251 பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது. தலைநகர் சொலில் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது தாய் கூப்பாங் சேமிப்பு கிடங்கில் பணியாற்றுகிறார்.

எல்லாம் காட்டு

விஜய் பிஸி!. ஆனாலும் அவர் இங்கே வருவது ஹேப்பி!.. அஜித் நெகிழ்ச்சி...

சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல!.. தவெகவை பொளக்கும் பழனிச்சாமி!...

ஸ்டாலினை மிசா டைம்ல கைது பண்ணாங்க!. மிசாவில் இல்லை!.. துரை வைகோ பேட்டி...

விரைவில் டோல்கேட்டே இல்லாதே இந்தியா!.. நிதின் கட்காரி சொன்ன குட்நியூஸ்!..

லண்டன் நகரில் முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு.. நாளை குலுங்க போகுது சில்வர்ஸ்டன் மைதானம்...

அடுத்த கட்டுரையில்
Show comments