நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான இஸ்ரேல் விண்கலம்

வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (17:44 IST)
உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது.
 
நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 'பேரேஷீட்' என்னும் அந்த விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன.

எல்லாம் காட்டு

LPG கேஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!.. விலை குறையுமா?..

எ.வ.வேலு!.. 40 இடங்களில் சோதனை!.. கணக்கில் வராத 40 லட்சம் பறிமுதல்!..

நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்!.. வெனிசுலாவில் 164 பேர் மரணம்!...

பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி!.. பழனிச்சாமி அறிவிப்பு..

திருவண்ணாமலை கோவில் பணி!.. நேர்முக தேர்வு ரத்து!.. தவெக அமைச்சர் ரமேஷ் அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments