1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:20 IST)

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனுதாக்கல்: ரஷ்யாவுக்கு சிக்கலா?

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரேன் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடந்த 4 நாட்களாக உக்கிரமாக போர் நடைபெற்று வருகிறது
 
 இந்த போரில் ஏராளமானோர் அகதிகளாக உக்ரைன் மக்கள் வெளியேறி உள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா மீது உக்ரேன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது 
 
உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் உக்ரைன் அரசு மனுத் தாக்கல் செய்து உள்ளது இந்த மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது