1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (13:55 IST)

5 மனைவிகளுக்கு ஒரேநேரத்தில் வளைகாப்பு நடத்திய நபர்!

america
அமெரிக்காவில் 5 பெண்களுக்கு ஒரே நாளில் வளைகாப்பு நடத்தியுள்ளார் ஷெட்டி வில்ஸ் என்ற நபர்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன்  தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள நியூயர்க் நகர்  நகரத்தைச் சேர்ந்த ஷெட்டி வில்ஸ் என்ற நபர், ஓரே நேரத்தில் 5 பெண்களுடன் பழகி, அவர்கள் ஐந்து பேருடன் நெருக்கமாகி,  ஐந்து பேரையும் திருமணம் செய்து கொண்டு, அவர்களை கர்ப்பமாக்கியுதுடன், அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே நாளில் வளைகாப்பு  நடத்தியுள்ளார்.

மேலும்,  5  மனைவிகளும் ஒற்றுமையாக வாழ்வதே தங்களின் குழந்தைகளின் வருவங்காலத்திற்கு நல்லது என ஷேட்டி வில்ஸ்வின் மனைவிகளுள் ஒருவராக ஆஷ்லி கூறியுள்ளனர்.

இது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.