வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (20:46 IST)

37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவெற்றம்

உலகில் நாளுக்குநாள் கொடூரங்களும் குற்றங்களும் அதிகரித்தபடியே உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்தில் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டு பலபேர் உயிரிழந்தனர். அதுபோல் சமீபத்தில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி ஜனங்கள் கொல்லப்பட்டனர்.  இது உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சவூதிஅரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் , தீவிரவாத கும்பலிடம் சேருவோருக்கு மரணதண்டனை அளிப்பது வழக்கம்.
 
இந்நிலையில் அந்நாட்டின் கொள்கைக்கு மாறாக பயங்கரவாதிகளாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த 37 பேருக்கு நீதிமன்றத் தீர்ப்பின் படி இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்  தெரிவிக்கின்றன.