1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (23:14 IST)

பொதுமக்கள் மீது கத்தியால் குத்திய கொடூர நபர்...!

ஜெர்மனி பலரைன் நகர் அருகே அன்ஸ்பக் என்ற பகுதியில் ஒரு  இளைஞர் கத்தியால் குத்தியதில்  பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

வெளி நாடுகளில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,  ஜெர்மனியிலும் தற்போது ஒரு வன்முறை சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனி பலரைன் நகர் அருகே அன்ஸ்பக் என்ற பகுதியில்  பொதுமக்கள் கூடியிர்ந்த போது, ஒரு இளைஞர் திடீரென தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவர்கள் ஈது சரமாரியாகக் குத்தினார்.

இந்தத் தாக்குதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அருகே இருந்தவர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடினர்.   அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸார், அவனைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவன் அங்கிருந்து ஓடவே,  போலீஸார் அவன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.