1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (12:46 IST)

இலங்கை அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம்: எதிர்க்கட்சி தலைவர் கையெழுத்து!

Srilankan
இலங்கை அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்கட்சி தலைவர் கையெழுத்திட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதை அடுத்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே  ஆகியோரும் பதவி விலக வேண்டுமென மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வர உள்ளன. இந்த தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கையெழுத்திட்டார்
 
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன