வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (10:00 IST)

மிட்நைட்டில் யாரோ என்று நினைத்து தாயை ரோட்டில் பலாத்காரம் செய்த மகன்!

அமெரிக்காவில் யாரோ என நினைத்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய அது அவனது தாய் என தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் வில்லொவ்வளே பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கதக்க பெண் ஒரு கேளிக்கை விடுதிக்கு சென்றுவிட்டு இரவு நேரம் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் தன்னை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்துள்ளார். 
 
ஆனால், சுற்றிமுற்றி பார்த்த போது யாரும் இல்லாததால் சற்று வேகமாக செல்ல துவங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு நபர் அந்த பெண்ணை சாலையில் இருந்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 
 
இதனை தடுக்க முயன்ற போது, அந்த நபர் யார் என பார்க்க முற்பட்டுள்ளார் அந்த பெண். அப்படி பார்த்த போது அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது அவரது மகன். 
 
இதனால் மனமுடைந்து போன அந்த பெண், காவல் நிலையத்தில் மகன் மீது புகார் அளித்தார். தற்போது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.