1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:34 IST)

ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு: எங்கு தெரியுமா?

சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 1,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 9,125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
எனவே, நிலையை கட்டுக்குள் கொண்டுவர மே 4 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவித்துள்ளார்.