1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (19:31 IST)

அமெரிக்காவிற்கு 70,000 கோடி டாலர்: செனட் அவை தாராளம்!!

அமெரிக்க பாதுகாப்பு துறை செலவுக்காக 70 ஆயிரம் கோடி டாலரை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது செனட் அவை.


 
 
அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கும் நிதியாண்டுக்கு 70,000 கோடி டாலர் ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவை அனுமதி அளித்துள்ளது.

இந்த மசோதாவின் மூலம் ஹக்கானி அமைப்பு, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விஷயத்தில் உதவி செய்கிறது.
 
2018 ஆம் ஆண்டின் ஒரு பகுதியாக இந்த மசோகா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 89 வாக்குகள் கிடைத்தன. 
 
அதே போல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை வலுப்படுத்த 850 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.