1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (12:23 IST)

மக்கள் தஞ்சமடைந்த தியேட்டரை குண்டுவீசி அழித்த ரஷ்யா: 1000 பேர் கதி என்ன?

மக்கள் தஞ்சமடைந்த தியேட்டரை குண்டுவீசி அழித்த ரஷ்யா: 1000 பேர் கதி என்ன?
பொதுமக்கள் ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்த தியேட்டரை இராணுவப்படை குண்டு வீசி அழித்ததாகவும் இதனால் அதில் தஞ்சமடைந்திருந்த ஆயிரம் பேர் கதி என்ன என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதலில்  ஈடுபட்டுவரும் ரஷ்யா ஒரு சில முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள ஒரு பிரபலமான தியேட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தஞ்சம் அடைந்து இருந்ததாகவும் அந்த திரையரங்கை குண்டு வீசி ரஷ்யா அழித்ததாகவும் கூறப்படுகிறது 
 
இதனால் அந்த தியேட்டரில் தஞ்சமடைந்திருந்த 1000 பேர் கதி என்ன என்ற தகவல் தெரியாததால் அந்த பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருவதாக கூறப்படுகிறது