1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 11 நவம்பர் 2023 (18:34 IST)

பிகாசோவின் ஓவியம் ரூ.1160 கோடிக்கு விற்பனை

Picasso painting
பிரபல ஓவியர் பிகாசோவின் ஓவியம் இந்த ஆண்டின் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது.

உலகளவில் பாப்லோ பிகாசோவில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கு அதிகளவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓவியங்களில் பல புதுமைகளை படைத்த பாப்லோ பிகாசோவின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த ஓவியங்கள் வாங்குவதை பெருமையாகவும் பொக்கிஷமாகவும் கருதுகின்ற்னர்.

இந்த நிலையில், பாப்லோ பிகாசோவின் சிறந்த படைப்புகளில் ஒன்று வுமன் வித் ஏ வாட்ச். இது  140 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1160 கோடி ஆகும். இந்த ஓவியத்தில்

இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகவும், உலகில் இந்த ஆண்டு ஏலத்ததில் அதிக தொகைக்கு விற்பனையான பொருள் பிகாசோவின் இந்த ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.