1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (23:38 IST)

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அறிவித்துள்ளது.

அதில்,  உருமாறிய  கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தற்போது 23 நாட்களில் பரவியதாக கண்டறியபப்ட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என் என தெரிவித்துள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது