1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (13:01 IST)

வட கொரியாவில் உணவுக்கே பஞ்சம்??

வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை, கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை வடகொரியாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த ஓராண்டாக வட கொரியாவில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தானிய விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனோடு வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை, கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை வடகொரியாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் வடகொரிய ஆளும் கட்சி கூட்டத்தில் பேசிய கிம் ஜோங் உன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.