1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (17:08 IST)

ஐநா சபை அனுப்பிய தடுப்பூசிகளை வாங்க மறுத்தாரா கிம்?

வடகொரியாவை பற்றி எப்போதும் மர்மமானதும் அதிர்ச்சிகரமானதுமான செய்திகளே வெளியாகி வருகின்றன.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின. இதுபோல அவரைப் பற்றியும் வடகொரியாவைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் இணையத்திலும் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டு இருந்தாலும், தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா சார்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஐநா சபை அனுப்பிய கொரோனா தடுப்பூசிகளையும் வாங்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.