ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (15:41 IST)

பிரச்சனைய பெரிசு பண்ணாதீங்க: சீனா கெஞ்சல்??

லடாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சீனா கோரியுள்ளது. 
 
நேற்றிரவு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா துருப்புகளுக்கு இடையே நடந்த மோதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
 
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை கூறியபோது, ‘இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும் இந்தியாவும் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 
 
அதோடு சீனா ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளது, அதில் லடாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் இந்தியா பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என கோரியுள்ளது.