வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (09:39 IST)

கொரோனா இல்லாத நூறு நாட்கள்- சாதித்து காட்டிய நியுசிலாந்து!

புதிதாக கொரோனா பாதிப்பில்லாமல் 100 நாட்களைக் கடந்துள்ளது நியுசிலாந்து.

உலகம் முழுவதும் கொரோனா பரவி இதுவரை 2 கோடிக்கும் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகளே வைரஸ் தொற்றைத் தடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் சிறிய நாடான நியுசிலாந்து கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 100 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பில்லாமல் இருந்து வருகிறது நியுசிலாந்து.

இதையடுத்து அங்கு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்துள்ளது. மக்கள் தொகைக் கம்மியாகக் கொண்ட நாடான நியுசிலாந்துக்கு கொரோனா கட்டுப்பாடுகளை மேற்கொள்வது மற்ற நாடுகளை எளிதாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.