ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (11:10 IST)

இந்தியா அனுப்புனா நீரவ் மோடி தற்கொலை பண்ணிப்பார்! – லண்டன் வழக்கறிஞர் வாதம்!

இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவான நீர்வ் மோடியை இந்தியா கொண்டு செல்வதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அவரை லண்டன் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீரவ் மோடியை இந்தியாவிற்கு அனுப்பக்கூடாது என அவரது வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார், அதில் அவர் நீர்வ மோடி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அங்கு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், மேலும் அவரை அடைக்க உள்ள சிறையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் அதனால் அவரை இந்தியா அனுப்பக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.