வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (16:59 IST)

’பல கோடிக்கு’ ஏலம் போன கிண்ணம்.. தம்பதியர்க்கு அடித்த அதிர்ஷ்டம் !

இன்றைய காலத்தில் செய்யப்படும் பொருள்கள் எதுவும், அதிக தொகைக்கு விற்கப்படுகிறதோ, இல்லையோ ஆனால் அந்தக் காலத்தில் செய்யப்பட்ட பொருள்கள் எல்லாம் பொக்கிஷமாகவே கருதப்படுகிறது. அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதனால் எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக உள்ளனர்.
அதேபோல் ஒரு சம்பவம் சுவிட்ஸர்லாந்து நாட்டில் நடந்துள்ளது. ஆம் ! சுவிட்சர்லாந்து நாட்டில் கொல்லெர் என்ற ஏல நிறுவனம் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிண்ணத்தை ரூ. 34 கோடியே 12 லட்சத்துக்கு 46 ஆயிரத்துக்கு ஏலம் விட்டது.
 
இந்தக் கிண்ணத்தில் அப்படி என்ன உள்ளது என்றால்... சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் ஒருமுறை சீனாவுக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள பழம்பொருள் கடையில் ஒரு கிண்ணத்தை வாங்கியுள்ளனர். அழகிய பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட அந்த கிண்ணம் 17 ஆண் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்த பின், அதை நல்லவிலைக்கு விற்க முடிவுசெய்தனர்.
 
அதன்படி, கொல்கெர் என்ற நிறுவனம், அந்த கிண்ணத்தை வாங்கி விற்க முடிவுசெய்தது. இதனையடுத்து கிண்ணத்தை ஹாங்காங் கொண்டு சென்ற நிறுவனம், அதை ஏலம் விட்டது. அதன் தொகை சுவிட்சர்லாந்து மதிப்பில் 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்  ஆகும்,. இந்திய மதிப்பில் சொல்வது என்றால் ரூ. 34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரம்  ஆகும். 
 
சுவிட்சர்லாந்து தம்பதியினருக்கு அதிர்ஷ்டம் அவர்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு அடித்ததாக பலரும் பேசி வருகின்றனர்.