தொடர்புடைய செய்திகள்
- 11.22 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
- 11.19 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
- மியான்மரில் ராணுவ அடக்குமுறை; ராணுவத்தின் பேஸ்புக் கணக்கு நீக்கம்!
- மக்கள் பயப்படுறாங்க.. முதல் ஊசிய எனக்கு போடுங்க! – முன்வந்த ஆஸ்திரேலிய பிரதமர்!
- தடுப்பூசிக்காக பாட்டி வேஷம் போட்ட ப்யூட்டிகள்! – அமெரிக்காவில் நூதன சம்பவம்!
5 லட்சத்தை கடந்த அமெரிக்க கொரோனா பலிகள்! – அதிபர் ஜோ பிடன் வருத்தம்!
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாய் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்த ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள நடப்பு அதிபர் ஜோ பிடன், முந்தைய ட்ரம்ப் ஆட்சி காலத்தில் கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியதோடு, எதிர் வரும் காலத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மக்கள் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
