ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (23:46 IST)

இளைஞரை முத்தமிட்ட பெண்ணுக்குச் சிறை!

சூடான் நாட்டில் ஆணுக்கு முத்தமிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், மற்ற நாடுகளைப் போல் இன்றி, ஒரு குற்றத் தண்டனைக்கு கொடூரமாக தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், அங்குள்ள ஒயிட் நைல் என்ற  மாகாணத்தில் வசித்து வரும் விவாகரத்தான ஒரு இளம் பெண்(20) ஒரு இளைஞருடன் பழகியுள்ளார்.

அப்போது, அப்பென் அந்த இளைஞரை முத்தமிட்டு அவருடன் நெருக்கமாக இருந்ததால், கண்வர் இல்லாத நிலையில், இன்னொரருவருடன் தவறான உறவுக்கான அவருக்கு கல்லால் அடித்துக் கொல்ல  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு சர்வதேச அமைப்புகள் எதிப்புகள் தெரிவிக்கவே, தண்டனை வாபஸ் பெற்று, மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதில், அப்பெண் இளைஞரை முத்தமிட்டதை ஒப்புக் கொண்டதால், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Edited By Sinoj