1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (10:20 IST)

ஆட்டிப்படைக்கும் கொரோனா: பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி!

கொரோனா நோய்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியுள்ளது இத்தாலி. 
 
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் யூகான் அடரில் உருவெடுத்த கொரோனா பலரை பலி வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு பரவி உயிர்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பலி ஆகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
இதுவரை உலக அளவில் 10,000 உயிர்கள் கொரோனாவால் போய்யுள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 427 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக இத்தாலியில் கொரோனாவல் இதுவரை 3,405 பேர் பலியாகியுள்ளனர். இது சீனாவை விட அதிகமானது. 
 
சீனாவில் 3,245 பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. புதிதாக யாருக்கு கொரொனா தொற்று ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.