1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (12:36 IST)

உக்ரைன் போரால் பாதிப்பு; இந்தியா இடம்பெயர ஐடி நிறுவனங்கள் திட்டம்!

உக்ரைன் போரால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள ஐடி நிறுவனங்கள் இந்தியாவிற்கு இடம்பெயர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்த போர் அரசியல், பொருளாதார, வணிகம் என சகல காரணிகளையும் பாதித்துள்ளது. இந்த போரால் உக்ரைன் ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் காரணமாக ஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள ஐடி நிறுவனங்கள் பல தங்களது நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம் மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் போர் பதற்றம் இல்லாத சூழலில் ஐடி நிறுவனங்கள் பல தெற்காசிய நாடுகளில் தங்கள் நிறுவனத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.