வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:09 IST)

மைதானத்தில் சிறுமியிடம் ஆபாச பேச்சு : நடுவருக்கு தடை

இத்தாலியில் நடைபெற்ற 2 ஆம் நிலை ஏபிசி  டென்னிஸ் தொடர் நடைபெறும்போது, மைதானத்தில் பந்து சேகரிக்கும் சிறுமியிடம், அங்கிருந்த நடுவர் ஆபாச பேச்சு பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டில் சமீபத்தில் இரண்டாம் நிலை ஏடிபி தொடர் நடைபெற்றது.  அதில், பிரபல  வீரர்களான சவுசா மற்றும் என்ரிகோ ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். 
 
அப்போது, மைதானத்தில் வீரர்கள் அடித்த பந்துகளைச் சேகரிக்கும் பணியில் இருந்த இரு சிறுமிகளிடம் விளையாட்டு நடுவர் ஆபாசமாகபேசியுள்ளார் என தெரிகிறது.
 
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் சிறுமிடம்  தவறாகப் பேசிய ஜியான்லுகா மேஸ்கரெல்லாவுக்கு நடுவராகப் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.