வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (09:41 IST)

அமெரிக்காவில் நொடிப்பொழுதில் நொறுங்கிய கட்டிடம்! – 100க்கும் மேற்பட்டோர் பலி?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் பகுதி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. புளோரிடாவில் கடல் அரிப்பு போன்ற காரணங்களால் கட்டிடங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை கான்க்ரீட்டுகளை வலுப்படுத்துவது, கட்டிடங்களை வலுப்படுத்துவது வழக்கமான செயல்முறையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 12 மாடி குடியிருப்பு வளாகத்திலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதுமாக சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.