தொடர்புடைய செய்திகள்
- ரஷ்ய அதிபர் புதின் விரைவில் கொல்லப்படுவார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சால் பரபரப்பு!
- உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் வெளியேற ஐ.நா.வில் தீர்மானம்: வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா...
- 2023- ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பேர் பரிந்துரை
- ரஷ்யாவில் இருந்து பிரசவத்துக்காக அர்ஜென்டினா செல்லும் பெண்கள்: காரணம் என்ன?
- உக்ரைன் போன தைரியத்துல தைவான் வந்துடாதீங்க! – ஜோ பைடனுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை!
ரஷியாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல்: உக்ரைன் கைவரிசையா?
ரஷ்யாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல் நடைபெற்று வருவதை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்த அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டு கடந்தும் தீவிரமாக இருநாட்டின் எல்லைகளில் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் எல்லை பகுதியில் அடிக்கடி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு திடீரென ரஷ்யாவின் எல்லை பகுதியில் 3 இடங்களில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் கார் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ட்ரோன் நொறுங்கி விழுந்தது என்றும் இதில் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
