1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (19:20 IST)

அலுவலகம் வர வேண்டாம் .. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட டுவிட்டர் நிறுவனம் !

அலுவலகம் வர வேண்டாம் .. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட பிரபல நிறுவனம் !

சீனா தேசத்திலுள்ள வூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாய் அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் பரவிய இந்த உயிர் கொல்லி வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை உலகெங்கிலும் மொத்தம் 3000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
 
சீனா தேசத்த அடுத்து, அருகே உள்ள தென்கொரியாவிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியாவில் இந்த நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இரானில் 66 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
அத்துடன் உலக அளவில் 90,000 க்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் பிரபல டுவிட்டர் நிறுவனம் கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியாக தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
 
மேலும், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டாமெனவும், வீட்டில் இருந்தபடி பணி செய்யுமாறு டுவிட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.