வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (14:44 IST)

பூங்கா ஊழியரிடம் இருந்து புலிக்குப் பரவிய கொரோனா… மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், மனித உயிர்களை பலிக்கொண்டு வருகிறது. மேலும் நாடுகளின் பொருளாதார சூழ்நிலையையும் சீர்குலைத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

அமெரிக்காவின் Bronx Zoo-வில் இருக்கும் அந்த புலிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த உயிரியல் பூங்காவில் உள்ள 6 புலிகளுக்கும் சிங்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த உயிரியல் பூங்காவில் பணியாற்றிய ஊழியர்கள் யாருக்காவது கொரோனா இருந்து அவர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கும் என கூறப்பட்ட நிலையில், நியுயார்க்கில் உள்ள பிராங்ஸ் விலங்கியல் பூங்காவில் உள்ள 4 வயது புலிக்கு அந்தப் பூங்காவில் ஊழியர் ஒருவரிடம் இருந்து தொற்று பரவியதாக மருத்துவர்கள் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.

வௌவாலிடமிருந்து மனிதனுக்குப் பரவியதாக சந்தேகிக்கப்படும் கொரோனா இப்போது மனிதனிடமிருந்து விலங்குக்குப் பரவி உள்ளது. உலகத்தில் மனிதனிடமிருந்து விலங்குக்கு வைரஸ் பரவுவது இதுவே முதல் முறை என்கிறார்கள் மருத்துவர்கள்  இதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.