தொடர்புடைய செய்திகள்
- சீனாவில் கொரோனா 2வது அலை: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்ந்ததால் பரபரப்பு
- திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை – கிராமமே தனிமைப்படுத்தல்!
- அஜித் பட தயாரிப்பாளருக்குக் கிடைத்த முக்கிய பதவி – திரையுலகினர் வாழ்த்து!
- கொரோனாவுக்கு பலியான 15 வயது சென்னை சிறுவன்: அதிர்ச்சி தகவல்
- நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு! அமைச்சரவை ஒப்புதல்!
சீனாவில் மீண்டும் கொரோனா! இந்த தடவை மீன் மூலமாக!? – மீண்டும் அதிர்ச்சி!
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.
சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் சீனாவில் பாதிப்புகள் குறைந்தன. இதனால் கடந்த 50 நாட்களாக சீனாவில் புதிய பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தன.
இந்நிலையில் தற்போது புதியதாக 49 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 10 பேர் வெளிநாட்டினர். பீஜிங்கில் இருந்து தற்போது வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் சீனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பீஜிங் மீன் மார்க்கெட்டில் மீன் வெட்ட பயன்படுத்தப்படும் கட்டையின் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக சீனாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
