1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:44 IST)

உச்சத்தில் ஒமிக்ரான் வைரஸ் - பிரிட்டன் பாதிப்பால் பீதியில் உலக நாடுகள்!

பிரிட்டனில் ஒரே நாளில் 78,000க்கும் அதிகமானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையி இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 78,000-த்துக்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரி்ட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் உக்கிரமாகி வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. 
 
மேலும் அடுத்த சில நாட்களில் பாதிப்பு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.