தொடர்புடைய செய்திகள்
- நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க்: நோக்கியா நிறுவனத்தின் மாஸ் திட்டம்
- செவ்வாய் கிரகம் செல்ல 4 பேருக்கு பயிற்சி - நாசா அறிவிப்பு
- நாளை ஒரே வரிசையில் ... 5 கிரகங்கள் வானில் தோன்றும் அதிசயம்
- வில் வடிவத்தில் தோன்றும் 5 கிரகங்கள்; வானவியல் அதிசயம்! – எப்போது பார்க்கலாம்?
- யார் வேணாலும் போகலாம் விண்வெளி சுற்றுலா; இஸ்ரோவின் அடுத்த திட்டம்!
நிலவுக்கு செல்வோரின் பெயர்களை வெளியிட்ட நாசா.. யார் யார்?
ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்பவர்களின் பெயர்களை நாsஆ சற்றுமுன் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஆர்ட்டெமிஸ் 2 என நிலவுக்கு செல்லும் ஆய்வு திட்டத்தை நாசாக கடந்த சில ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறது.
இந்த ஆர்ட்டெமிஸ் 2 மூலம் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு அறிவியல் அற்புதம் நடக்க இருப்பதை அடுத்து இந்த ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்ல இருக்கும் நபர்களின் பெயர்களை நாசா முதல் முதலாக வெளியிட்டுள்ளது.
ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட்வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மாக் கோச் ஆகிய ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் நிலவு சுற்று பாதைக்கு சென்று திரும்புவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் ஒன் திட்டம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
