தொடர்புடைய செய்திகள்
- இன்று முதல் மதுரை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து! – தெற்கு ரயில்வே!
- தமிழர்களுக்கு வேலை கொடுக்காத என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூடுவோம்: அன்புமணி ராமதாஸ்
- நீட் தேர்வு முடிவுகள் எப்போது? தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ தகவல்!
- ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு...
- இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தேர்வா? திமுக எம்பி கனிமொழி கண்டனம்
தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்களா? அன்புமணி ஆவேசம்!
தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்களா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும்; 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது சாத்தியமல்ல.
700.கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்; தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும்; மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும். இது கூடாது.
மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்.
