தொடர்புடைய செய்திகள்
- மைதானத்தில் ரகளையில் ஈடுபட்ட டிவி நடிகை: போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!
- பீர்பாட்டில் தாக்குதல்: பாமகவினர் அட்டகாசம்: போலீஸுக்கு கொலை மிரட்டல்!!!
- வியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா
- அமெரிக்காவில் வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்
- அமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது
ஆபாச சிடிக்களை தூக்கி எறிந்த பெற்றோர்: நஷ்டஈடு கேட்டு வழக்கு போட்ட மகன்
தான் சேகரித்து வைத்த ஆபாச சிடிக்களை பெற்றோர் அழித்ததால் மகன் அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ஆபாச படங்களுக்கு அடிமையான அந்த இளைஞர் ஏராளமான ஆபாச சிடிக்களை வாங்கி தனது ரூமில் குவித்து வைத்திருந்தார். திடீரென ஒருநாள் தான் வைத்திருந்த ஆபாச சிடிக்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் கேட்டபோது, அவர்கள் தான் இதனை அழித்தது தெரியவந்தது.
இதனால் கடுப்பான அந்த இளைஞர் சிடிக்களை அழித்ததற்காக தனது பெற்றோர் இந்திய மதிப்பில் 60 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது என்று நீதிமன்றமே திணறி வருகிறதாம்.
